காரைக்கால், அக்.10: நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதரர்களுக்கு அரசே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்கால் திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலக வாயிலில் வாயிற் கூட்டம் நடைெபெற்றது. நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதரர்களுக்கு உள்ளாட்சித்துறையின் ஊதிய கணக்கின் கீழ் அரசே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும், உள்ளாட்சி ஊழியர்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ள 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை கடந்த 1.1.2016 முதல் எந்தவித நிபந்தனையுமின்றி நிதி பலன்களை வழங்க வேண்டும், 7வது ஊதியக்குழு பரிந்துரையில் உள்ள வீட்டு வாடகைப்படி மற்றும் போக்குவரத்து படியை கடந்த 1.7.2017 முதல் முன்தேதியிட்டு வழங்க வேண்டும், கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக கிராம பஞ்சாயத்துகளில் பணிபுரியும் தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கடந்த 2014-15 ஆண்டு முதல் 2018-19 வரை 5 ஆண்டுகளுக்கு உண்டான நுழைவு வரிக்கு ஈடான மானியத்தொகையில் மீதமுள்ள தொகைகளை சம்பந்தப்பட்ட நகராட்சிகளுக்கும், வீட்டு வரிக்கு ஈடான மானியத்தொகைகளை சம்பந்தப்பட்ட கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கும் வழங்க வேண்டும், பணியின்போது இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் உச்சவரம்பின்றி ஊழியர்கள் இறந்துபோன 90 நாட்களுக்குள் அவரவர் கல்வி தகுதிக்கேற்ப நிரந்தர பணியினை வழங்க வேண்டும் உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்ட வந்த சம்மேளன நிர்வாகிகளை உள்ளாட்சித்துறை இயக்குனர் பேச்சுவார்த்தைக்கு அழைத்து பேசி, கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்து இன்று வரை வழங்கவில்லை.