மேட்டுப்பாளையம், அக்.9: கோவை மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயிலில் இருந்து தேக்கம்பட்டிக்கு செல்லும் வழியில் தேக்கம்பட்டி பம்ப் ஹவுஸ் உள்ளது. பம்ப் ஹவுஸ் அருகே பவானி ஆறு இரண்டு கிளைகளாக பிரிந்தோடுகிறது. ஆற்றின் நடுவே மண்திட்டு உள்ளது. கோவை கவுண்டர்மில் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உள்பட 50க்கும் மேற்பaட்டோர் பம்ப் ஹவுஸ் பகுதிக்கு சுற்றுலா வந்திருந்தனர்.
அப்போது, பவானி ஆற்றில் வெள்ளம் குறைந்த அளவே ஓடிக்கொண்டிருந்தது. ஒரு சிலர் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தனர். குடும்பத்துடன் சுற்றுலா வந்தவர்கள் நடுத்திட்டில் சமையல் செய்து சாப்பிட்டு ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தனர்.