கோவை. அக்.4: ‘‘காய்ச்சல் பாதிப்புகளுக்கு உள்ளாகி மருந்துக்கடைகளுக்கு வருபவர்களுக்கு மருத்துவர் மருந்து சீட்டு இல்லாமல் மாத்திரைகளை வழங்க வேண்டாம்,’’ என்று சுகாதாரத்துறை இணை இயக்குநர் பானுமதி தெரிவித்துள்ளார்.
கோவை அரசு மருத்துவமனையில் கடந்தாண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த நிலையில், இந்தாண்டு டெங்கு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது. கிரமாப்புறங்களில் டெங்கு கொசு உற்பத்தியாவதை தடுக்க சுகாதாரத்துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன்படி, சுகாதாரத்துறை இணை இயக்குனர் பானுமதி தலைமையில் அவரது அலுவலகத்தில் மருந்து வணிகர்களுடன் டெங்கு குறித்த விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அப்போது மருந்து வணிகர்களிடம் அவர் கூறியதாவது: காய்ச்சல் என்று கூறி மருந்து கேட்பவர்களிடம் மருத்துவரை பார்த்தீர்களா? என்று கேளுங்கள்.