ஓமலூர் வட்டாரத்தில் காந்தி பிறந்த நாளில் மது விற்ற

22 பேர் கைதுஓமலூர், அக்.4: ஓமலூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட ஓமலூர், தாரமங்கலம், தீவட்டிப்பட்டி, ஜலகண்டாபுரம், நங்கவள்ளி, தொளசம்பட்டி பகுதிகளில், காந்தி ஜெயந்தி நாளில் மது விற்பனை செய்யப்படுவதாக ஓமலூர் டிஎஸ்பி பாஸ்கரனுக்கு புகார் வந்தது. இதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் மதுபானங்களை விற்பனை செய்த அடைக்கனூர் முத்துமாணிக்கம், மாட்டுக்காரனூர் பழனிசாமி, கட்டிநாயக்கன்பட்டி பழனிசாமி, கோவிலூர் ராமன், மாதையன், மாசிலாமணி, செங்குட்டுவன், வையாபுரி, சந்தோஷ்குமார், சம்பூரணம், கோவிந்தன், சுரேந்திரன், ராஜேந்திரன், ராஜா, தங்கராஜ், சுமன்சிங், மணி, மாராயி, செந்தில், மணி, ராபின், சரோஜா என 3 பெண்கள்

உட்பட 22 பேரை கைது செய்தனர்.

Related Stories: