கூடலூர், அக். 4: குமுளி தமிழக எல்லைப்பகுதியில் ஆம்னி பஸ்கள் நிறுத்தப்படுவதால், மாலை நேரங்களில் எல்லை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.கூடலூர் நகராட்சியின் 21வது வர்டுபகுதியான குமுளி, தேனி மாவட்டத்தின் தெற்கு எல்லைப்பகுதியாக உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மற்றும் பெங்களூர், புதுச்சேரி போன்ற இடங்களிலிருந்தும், தினந்தோறும் நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பஸ்கள் குமுளிக்கு வந்து செல்கின்றன. தமிழக எல்லைப்பகுதி குமுளி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் இங்கு பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதியும், பஸ்டாண்ட் வசதி இல்லாததால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.