மன்னார்குடி, அக்.4: திருவாரூர் மாவட்ட நாட்டுநலப்பணித்திட்ட தொடர்பு அலுவலர் ராஜப்பா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மேல் நிலைபள்ளி நாட்டு நலப்பணித்திட்ட அனைத்து அமைவுகளிலும் மத்திய அரசின் திட்டங்களான ஜல்சக்தி அபியான் (நீர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை), போஷான் அபியான் (ஊட்டச்சத்து திட்டம் ), ஸ்வச் பாரத் (தூய்மை இந்தியா), டிஜிட்டல் இந்தியா (பணமில்லா பரிவர்த்தனை), பிட் இந்தியா (ஆரோக்கியமான இந்தியா) ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு, பிரதம மந்திரி காப்பீடு திட்டம், பிரதமர் ஓய்வூதிய திட்டம் போன்ற திட்டங்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் மழை நீர் சேகரிப்பு, நெகிழி இல்லா தமிழகம், சாலை பாதுகாப்பு பேரிடர் மேலாண்மை கல்வி துறையில் அண்மையில் நடைபெறும் புதிய திட்டங்கள் போன்றவை குறித்த கருத்தரங்குகள், விழிப்புணர்வு பேரணிகள் நடைபெற்றன.8 பள்ளி என்எஸ்எஸ் அமைவுகள் சார்பாக இலவச கால்நடை மருத்துவ முகாம்களும், 12 பள்ளி என்எஸ்எஸ் சார்பாக இலவச பொது மருத்துவ முகாம்களும், 2 இலவச தோல் நோய் மருத்துவ முகாம்களும், 3 சித்த மருத்துவ முகாம்களும் நடைபெற்றுள்ளது.