தஞ்சை, அக். 4: தஞ்சையில் தந்தை பெரியார் 141வது பிறந்த நாள் விழா, பெரியார் பட ஊர்வலம், பொதுக்கூட்டம் நடந்தது. சிவகங்கை பூங்கா முன் நடந்த பொதுக்கூட்டத்துக்கு திக மண்டல செயலாளர் அய்யனார் தலைமை வகித்தார். மாநகர தலைவர் நரேந்திரன் வரவேற்றார். திக நிர்வாகிகள் குணசேகரன், அமர்சிங், அருணகிரி, வீரமணி, ஸ்டாலின், சேகர், சுதாகர், ராமலிங்கம், அரங்கராஜன் முன்னிலை வகித்தனர். திக பிரச்சார குழு அமைப்பாளர் அன்பழகன், திமுக தீர்மானக்குழு செயலாளர் சபாபதிமோகன் சிறப்புரையாற்றினர்.