கோவை, அக்.2: கோவை மாவட்டத்தில் ஆன்லைனில் போலி பட்டாசுகள் விற்பனையை தடுக்க கோரி பட்டாசு விற்பனையாளர்கள் கலெக்டரிடம் நேற்று மனு அளித்தனர். இது குறித்து கோவை மாவட்ட பட்டாசு விற்பனை மற்றும் சிறு வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் சரத் விக்னேஷ், அசோக், லோகநாதன் ஆகியோர் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில், கோவை மாவட்டத்தில் 450க்கும் மேற்பட்ட இடங்களில் எங்களது சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் தற்காலிக உரிமம் பெற்று பட்டாசு விற்பனை செய்து வருகின்றனர்.