கொள்ளிடம், அக்.2: கொள்ளிடம் அருகே எருக்கூரில் சிதைந்து போன ஆண்டி வாய்க்காலை தூர் வார கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள பிரதான புதுமண்ணியாறு பாசன வாய்க்காலிலிருந்து பிரிந்து வரும் பாசன கிளை வாய்க்கால் ஆண்டி வாய்க்காலாகும். இந்த வாய்க்கால் உப்பங்காடு கிராமத்திலிருந்து பிரிந்து அரசூர், எருக்கூர், சேந்தங்குடி உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கிராமங்களின் வழியே சென்று சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன வசதி செய்து தருகிறது. மழைக்காலங்களில் அதிக மழை பொழிவதால் வயல்களில் தேங்கும் அதிகப்படியான தண்ணீரை எளிதில் வடிய வைக்கும் வடிகால் வாய்க்காலாகவும் இருந்து வருகிறது. சுற்றுப்புற கிராமங்களில் உள்ள குளங்களுக்கு தண்ணீரை எடுத்து சென்று தேக்கி வைப்பதற்கு பயன்படும் வாய்க்காலாகவும் இந்த ஆண்டி வாய்க்கால் இருந்து வருகிறது.