காரைக்கால், அக்.2: புதுச்சேரியில் வக்பு வாரியம் மற்றும் ஹஜ் கமிட்டி அமைக்க வலியுறுத்தி, காரைக்காலில் வரும் 11ம் தேதி கவன ஈப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என முஸ்லீம் ஜமாஅத் செயற்குழுவில் முடிவு செய்துள்ளது.காரைக்கால் நகர முத்தவல்லிகள், அனைத்து பள்ளி ஜமாஅத்தார்கள், ஆலிம்கள், சமுதாய அமைப்புகள், இஸ்லாமிய சங்கங்கள், அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளடக்கிய, காரைக்கால் முஸ்லீம் ஜமாஅத்தின் செயற்குழு கூட்டம், காரைக்கால் தனியார் இடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, ஒருங்கிணைப்பாளர் முஹம்மது யாசின் தலைமை தாங்கினார். துணை ஒருங்கிணைப்பாளர் அபுல் அமீன் வரவேற்றார்.கூட்ட முடிவில், புதுச்சேரி ஹஜ் கமிட்டிக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்காத காரணத்தால், பல்வேறு சலுகைகளை பெறம்டியாமல் போகிறது. எனவே ஹஜ்கமிட்டியை உடனே அமைக்கவேண்டும். ஒருவருக்கு ஜாதி சான்றிதழ் வழங்குவதற்கு அவரது தந்தையின் ஜாதி சான்றிதழின் அடிப்படையில் அதே ஜாதியை காண்பித்து ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.