முத்துப்பேட்டை, அக்.1: முத்துப்பேட்டை அடுத்த சங்கேந்தியில் குடியிருப்புகள் அதிகளவில் இருக்கும் பகுதியில் பயணிகள் பேருந்து நிறுத்த குடை ஒன்று உள்ளது. இதனை இப்பகுதி மக்கள், சுற்றுப்பகுதி கிராமத்தை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு வந்து தான் சுற்றுப்பகுதியை சேர்ந்த மக்கள் பள்ளி மாணவ, மாணவிகள், விவசாய கூலித்தொழிலாளர்கள், மற்ற பணிக்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம், முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை போன்று பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இதனை சமீபகாலமாக ஊராட்சி நிர்வாகம் பராமாரிப்புகள் செய்யாததால் அரசியல் கட்சியினர் இதில் போஸ்டர் ஓட்டுவது விளம்பரங்கள் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் சென்ற வாரம் அப்பகுதியை சேர்ந்த சிலர் இதன் முன்பு சட்டவிரோத மணலை எடுத்துவந்து இங்கு குவித்து வைத்துள்ளன நீண்ட நாட்களாகியும் அகற்றிக்கொள்ளாத்தால் இங்கு வரும் பயணிகளுக்கு மிகவும் இடையூறாக இருந்து வந்தது.