சேலம், அக்.1: மருத்துவம் சார்ந்த சட்டப் பிரச்னைகளும் மற்றும் மருத்துவத் தீர்ப்பாயத்தின் தேவையும் என்ற தலைப்பில், தேசிய அளவிலான ஆய்வரங்கம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் நடந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான விடுதலை தலைமையில் நடந்த ஆய்வரங்கின் நிறைவு விழாவில், டாக்டர் சென்னை எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக உயர் சிறப்புநிலைப் பேராசிரியர் டாக்டர் சொக்கலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில், பேராசிரியர் டாக்டர் சொக்கலிங்கம், மூத்த வழக்கறிஞருர் விடுதலை ஆகியோர் பேசுகையில், ‘நாளுக்குநாள் அதிகரித்து வரும் மருத்துவ வழக்குகளை சரியான முறையில் தீர்வு காண மருத்துவத் தீர்ப்பாயம் அமைக்கப்பட வேண்டியது அவசியம்.