ஈரோடு, அக். 1: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனுடையோர் நலச்சங்கம் சார்பில், 82 பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட பட்டாவிற்கு, இடம் வழங்க வேண்டும். அரசு பஸ்களில் மாற்றுத்திறனாளிகள் கட்டண சலுகையில் செல்வோர்களிடம் நடத்துனர்கள் கனிவாக நடந்து கொள்ளவதை உறுதி செய்ய வேண்டும். ஸ்மார்ட் கார்டு வடிவிலான அடையாள அட்டை வழங்க வேண்டும். பழுதடைந்த மாற்றுத்திறனாளிகள் கழிவறையை சீரமைக்க வேண்டும். பஸ் ஸ்டாண்டில் மாற்றுத்திறனாளிகள் வாகனங்களை நிறுத்த இட வசதி மற்றும் மாநகரில் நடந்து திட்ட பணிகளால் சாலைகளில் மாற்றுத்திறனாளிகள் வாகனங்கள் ஓட்ட முடியாத நிலை உள்ளது.