ஈரோடு, அக். 1: கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் பணிபாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் ஈரோடு ஸ்டேட் பேங்க் ரோட்டில் உள்ள கால்நடை பன்முக மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பிரேம்குமார் தலைமை தாங்கினார். இதில் மாநில பொருளாளர் செல்வம் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தினை துவக்கி வைத்து பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு கால்நடை பன்முக மருத்துவமனையில் கடந்த 28ம் தேதி பணியில் இருந்த டாக்டர் சிவக்குமார் என்பவரை சூரம்பட்டி பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவர் வெள்ளாட்டை சிகிச்சைக்காக கொண்டு வந்தபோது தகராறு செய்துள்ளார்.