ஆவடி: திருவள்ளூர் தெற்கு, வடக்கு மாவட்ட தமாகா சார்பில் மாவட்ட புதிய பொறுப்பாளர்கள் அறிமுகக்கூட்டம் திருமுல்லைவாயலில் நடந்தது. திருவள்ளூர் தெற்கு, வடக்கு மாவட்ட தமாகாவில் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் குறித்தும், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம், ஆவடி அடுத்த திருமுல்லைவாயலில் நேற்று முன்தினம் நடைபெற்றது. மாவட்ட தலைவர்கள் விக்டரி மோகன், கும்மிடிப்பூண்டி சேகர் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட புதிய பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்ட திருவேங்கடம், வழக்கறிஞர் வேல்முருகன், சுகுமாரன், பழனி, சம்பத்குமார் ஆகியோர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். மேலும், உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடைபெற்றது.