ஊத்துக்கோட்டை : பூச்சிஅத்திபேடு கொசஸ்தலை ஆற்றில் பிளாஸ்டிக், குப்பைகளை கொட்டும் தனியார் நிறுவனங்கள் மீது பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரியபாளையம் அருகே பூச்சி அத்திப்பேடு, திருக்கண்டலம் மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராமங்களில் அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் என 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதில் தனியாருக்குச் சொந்தமான 100க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிச்சாலைகளில் மிஞ்சிய உணவுப்பொருட்கள், பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவைகளை சேகரித்து அந்தந்த தொழிச்சாலையின் ஊழியர்கள் அருகில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் கொட்டுகிறார்கள். இதனால் துர்நாற்றம் வீசுவது மட்டுமல்லாமல் அப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே கழிவுகளை கொசஸ்தலை ஆற்றில் கொட்டக்கூடாது என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறிதாவது :