புழல், அக்.1: செங்குன்றம் அடுத்த நல்லூர் சுங்கச்சாவடியில் 10க்கும் மேற்பட்ட நுழை வாயில் உள்ளது. இதன் வழியாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் தண்ணீர் கேன் ஏற்றிக் கொண்டு மினி வேன் ஒன்று வந்தது. டிரைவரிடம் கட்டணம் செலுத்துமாறு சுங்கவாடி ஊழியர்கள் கூறியுள்ளனர். ஆனால், தங்களிடம் பாஸ் இருப்பதாக வேன் ஓட்டுநர் கூறினார்.