கோவை, செப். 30: கோவை திருச்சி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ கிறிஸ்துநாதர் ஆலய பிரதிஷ்டை விழாவையொட்டி 22வது அசன பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சிறப்பு ஆராதனை நடந்தது. தலைமை போதகர் ஜான் குணசீலன், உதவி போதகர் ஆஸ்டின் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு ஆராதனை செய்தனர்.ஆராதனைக்கு பின்னர் அசன விருந்து துவங்கியது. ஒரே நேரத்தில் ஆயிரம் பேர்அமர்ந்து சாப்பிடும் வகையில் மேஜையுடன் கூடிய இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தது. 75கிலோ எடை கொண்ட 60 மூட்டை அரிசி, 50 கிலோ எடை கொண்ட 20 மூட்டை துவரம் பருப்பு, 150வாழைத்தார், 1500 கிலோ கத்தரிக்காய், 3 ஆயிரம் கிலோ மட்டன் பயன்படுத்தப்பட்டது. மாலை 5 மணி வரை அசன விருந்து நடந்தது. இதில் சுமார், 25 ஆயிரம் பேருக்கு உணவு பரிமாறப்பட்டது.