தம்மம்பட்டி, செப்.26: தம்மம்பட்டி அருகே ஏரி வாய்க்காலை, போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே 120 ஏக்கர் பரப்பளவில் செந்தாரப்பட்டி ஏரி அமைந்துள்ளது. மழைக்காலங்களில் சுவேத நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, பெருமாள் கோயில் அருகே சுவேத நதியின் மதகில் பிரிந்து, கோனேரிப்பட்டி வாய்க்கால் வழியாக செந்தாரப்பட்டி ஏரிக்கு தண்ணீர் வருகிறது. இந்த ஏரியின் மூலம் செந்தாரப்பட்டி, தம்மம்பட்டி, கோனேரிப்பட்டி, கொண்டையம்பள்ளி, பாலக்காடு சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங்கள் பாசன வசதியையும், விவசாய கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளுக்கு நிலத்தடி நீராதாரமாகவும் விளங்குகிறது.