காரைக்குடி, செப். 26: காரைக்குடி காவேரி மருத்துவமனை சார்பில் உலக இருதய தினத்தை முன்னிட்டு நடத்தப்பட உள்ள பிரமாண்ட மாரத்தான் போட்டியில் 2000த்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் என மருத்துவமனை செயல் இயக்குநர் டாக்டர் சலீம், மருத்துவ நிர்வாகி டாக்டர் காமாட்சிசந்திரன் ஆகியோர் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், காரைக்குடி காவேரி மருத்துவமனை சார்பில் உலக இருதய தினத்தை முன்னிட்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வரும் செப்.29ம் தேதி காலை 6.30 மணிக்கு மாரத்தான் போட்டி நடத்தப்பட உள்ளது. இதில் ஆண்கள் பிரிவில் 16 வயது முதல் 25 வயதினரும், 26 முதல் 40 வயது வரை, 40 வயதுக்கு மேல் என 3 பிரிவாக நடத்தப்பட உள்ளது. பெண்கள் பிரிவில் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவிற்கான போட்டியும் நடத்தப்பட உள்ளது.