நாமக்கல், செப்.25: கொல்லிமலை பகுதியில் பெய்த பலத்த மழையால் பவித்திரம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கொல்லிமலை மற்றும் சுற்றுப்புற பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால், கொல்லிமலையில் உள்ள ஓடைகள் மற்றும் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது. மலையின் பல பகுதிகளில் ஆங்காங்கே பநீரூற்றுகள் தோன்றியுள்ளது. தொடர் மழையால் கொல்லிமலையில் தெற்கு பகுதியில் உள்ள பவித்திரம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஆனால், ஏரிக்கு வரும் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் அடைப்பு ஏற்பட்டு அருகில் விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.