திருச்செங்கோடு, செப்.25: திருச்செங்கோட்டில், செங்குன்றம் தமிழ்ச்சங்கம் சார்பில் இலக்கிய விழா மற்றும் சிறப்பு சொற்பொழிவு நடந்தது. வித்யா விகாஸ் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சிங்காரவேலு தலைமை வகித்தார். தமிழ்ச்சங்க அமைப்பாளர் பொன்.கோவிந்தராசு வரவேற்றார். தொழிலதிபர்கள் ரேண் இந்தியா ராதா, நாகராஜ், எஸ்கேவி கல்வி நிறுவனங்களின் தலைவர் கோல்டன் ஹார்ஸ் ரவி, வழக்கறிஞர் பரணீதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இலக்கியத்தில் பெண்மை என்ற தலைப்பில் சென்னை ஏவிஎம் ஆவிச்சி கலை அறிவியல் கல்லூரி பேராசிரியை பிரபாவதி பேசினார். ஒரு கவிஞர் என்ற தலைப்பில் கண்ணதாசன் பற்றியும், ஒரு கலைஞர் என்ற தலைப்பில் நடிகர் சிவாஜி கணேசன் பற்றியும், ஒரு தலைவர் என்ற தலைப்பில் காமராஜர் பற்றியும், காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் பேசினார்.