கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தேர்வு ரத்து

தமிழ்நாடு  கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் காலியாக உள்ள 111 கணினி இயக்குபவர்கள்  பணியிடங்களை நிரப்ப கடந்த 8ம் தேதி சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய  இடங்களில் எழுத்து தேர்வு நடந்தது. தற்போது சில நிர்வாக காரணங்களுக்காக  எழுத்து தேர்வு, தேர்வு முடிவுகள் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள்  அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. தேர்வு நடைபெறும் தேதி பின்னர்  அறிவிக்கப்படும் என கோவை தொழிலாளர் உதவி ஆணையர் வெங்கடேசன் (சமூக  பாதுகாப்பு திட்டம்) தெரிவித்துள்ளார்.

Related Stories: