மதுரை, செப்.25: மதுரையில் வைகை தென்கரையில் சாலையோரம் மழையால் அரிப்பு ஏற்பட்டுதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மதுரை ஆரப்பாளையத்தில் வைகை ஆற்று தென்கரையில் சாலை அமைந்துள்ளது. இந்த சாலை பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக உள்ளது. மேலும், சாலையோரம் தற்போது மழையால் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சாலையில் சென்று வரும் பஸ்கள், வாகனங்கள், எதிரில் வரும் வாகனங்களுக்கு வழி விடுவதற்காக, சற்று ஓரம் ஒதுக்கினால், வாகனங்கள் ஆற்றுக்குள் கவிழும் அபாயம் உள்ளது.