ஓய்வூதியர் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்க 14க்குள் விண்ணப்பிக்கலாம்

நாகை, செப்.25: நாகையில் நடைபெறும் ஓய்வூதியர் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.நாகை கலெக்டர் அலுவலகத்தில் வரும் அக்டோபர் மாதம் 24ம் தேதி ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெறவுள்ளது. மாவட்டத்தில் மாநில அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியர்கள் இதுவரை தங்களது ஓய்வூதிய பலன்கள் கிடைக்காதவர்கள் மட்டும் தங்களது குறை தொடர்பான மனுக்களை எழுதி அதை இரண்டு பிரதிகள் எடுத்து கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) என்ற முகவரிக்கு வரும் 14ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். மனுவில் பெயர், பதவி, முகவரி, ஓய்வுபெறும் போது பணிபுரிந்த அலுவலகம், ஓய்வுபெற்ற நாள் மற்றும் ஆண்டு, ஓய்வூதியம் தொடர்பான குறைகள், குறைகள் எந்த அலுவலகத்தில் அலுவலரிடம் நிலுவையில் உள்ளது என்பது குறித்து இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: