முத்துப்பேட்டை, செப்.24: முத்துப்பேட்டை அடுத்த பாண்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் போஷான் அபியான் என்ற திட்டத்தின் மூலம் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து உணவு உண்ண விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், சுகாதாரத்தை மேம்படுத்துதல் கல்வி தரத்தை மேம்படுத்துதல் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குதல் ஆகியவற்றை உள்ளடக்கி ஊட்டச்சத்து உணவு கண்காட்சி நேற்று நடைபெற்றது.முன்னதாக கண்காட்சி துவக்க நிகழ்ச்சி பள்ளிதலைமையாசிரியர் விஜயராஜ் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ராஜமாணிக்கம் வரவேற்று பேசினார். ஆசிரியர்கள், மாணவர்கள் தயார் செய்து வைத்திருந்த இயற்கை உணவு வகைகள் பற்றியும் அதன் பயனை பற்றியும், அணைத்து மாணவர்களும் ஊட்டச்சத்து உணவுகளை உண்ணுவது அவசியம் என விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.இந்த கண்காட்சியில் மாணவர்களின் சொந்த முயற்சியில் தயார் செய்யப்பட்ட உணவுவகைகள் காட்சிப்படுத்தப்பட்டன. அதேபோல் இயற்கை உணவுகளை தயார் செய்யும் தானியங்களும் கண்காட்சியில் இடம் பெற்று இருந்தது.