தூத்துக்குடி, செப். 24: தூத்துக்குடியில் மாற்றுத்திறன் சிறார்களுக்கான புத்துணர்வு சுற்றுலா பயணத்தை கலெக்டர் சந்தீப்நந்தூரி கொடியசைத்து துவக்கி வைத்தார். தூத்துக்குடி கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து மாற்றுத்திறன் சிறார்களுக்கான ஒரு நாள் புத்துணர்வு சுற்றுலா பயணம் துவக்க நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் கலெக்டர் சந்தீப்நந்தூரி, கலந்து கொண்டு, ஒரு நாள் புத்துணர்வு சுற்றுலா பயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்து, குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.