சாயப்பட்டறை கழிவு நீர் கிணறு, போர்வெல்லில் கலந்து குடிநீர் கலங்கலாக வரும் அவலம் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு

கரூர், செப். 24: சாயப்பட்டறைகளின் கழிவுநீர் கிணறு, போர்வெல்களில் கலந்து குடிநீர் கலங்கலாக வருவதாக பொதுமக்கள் புகார் அளித்தனர்,கரூர் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் சூர்யா கதிரவன் பொதுமக்கள் சார்பில் கலெக்டரிடம் அளித்த கோரிக்கை மனு:

கரூர் நகரின் மையப் பகுதியான லைட்ஹவுஸ், வஞ்சியம்மன் கோயில் தெருவில் உள்ள கிணறு, நகராட்சி, வீடுகளில் உள்ள போர்வெல்களில் குடிநீர் கலங்கலாக வருகிறது. குடிநீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. பயன்படுத்தினால் கண் எரிச்சல், தோல் அரிப்பு போன்ற நோய்கள் வருகிறது. இப்பகுதியில் சட்டவிரோதமாக சாயப்பட்டறை இயங்கி வருகிறது. ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: