கோவை, செப்.20:கோவையில் தொடர் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபருக்கு 200 நாட்கள் சிறை தண்டனை விதித்து கோவை சட்டம்-ஒழுங்கு துணை ஆணையர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டார். ரத்தினபுரி பொங்கி அம்மாள் வீதியை சேர்ந்தவர் கவுதம்(27). இவர் மீது அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், ஜாமீனில் வெளியே இருந்த இவர் மீண்டும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டதால் ரத்தினபுரி போலீசார் கவுதமை பிடித்து சட்டம்- ஒழுங்கு துணை ஆணையர் பாலாஜி சரவணன் முன்பு ஆஜர்படுத்தினர்.