மன்னார்குடி, செப். 19: வடுவூர் அருகே கல்லூரி வாயிலில் நின்று கொண்டிருந்த மாணவர்கள் மீது அருகில் இருந்த மரத்திலிருந்து பறந்து வந்த கதண்டுகள் கடித்ததில் 5 பாலி டெக்னிக் மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
திருவாரூர் மாவட்டம் வடுவூர் அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் படிக் கும் மாணவர்களான எடமேலையூரை சேர்ந்த கண்ணதாசன் (18), மன்னார்குடி யை சேர்ந்த இம்ரான் கான் (18), பழையனூர் ஐயப்பன் (18), ராயபுரம் அறிவு (18), சுந்தரக்கோட்டை ராஜ்குமார் (18) ஆகிய 5 மாணவர்களும் நேற்று மதியம் கல்லூரியில் மதிய உணவு சாப்பிட்டு விட்டு கல்லூரியில் வாயிலின் அருகே அடர்ந்த மரங்கள் உள்ள வாய்க்கால் ஓரம் நின்று பேசி கொண்டிருந்தனர்.