நாளை தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம்

மதுரை, ெசப்.19: மதுரை கோ.புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் மகாலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையமும், தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு கிளை அலுவலகமும் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நாளை நடக்கிறது. முகாமில் பிரபல தனியார் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று ஆட்களை தேர்வு செய்கின்றன. முகாமில் 10ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள், ஐடிஐ. டிப்ளமோ முடித்தவர்கள் பங்கேற்கலாம். முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்களது கல்விச்சான்றிதழ்கள், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் நாளை காலை 10 மணியளவில் மதுரை கோ.புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து பங்கேற்க வேண்டும். இம்முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதால், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எவ்விதத்திலும் பாதிக்காது” என கூறியுள்ளார்.

Related Stories: