குண்டாசில் வாலிபர் கைது

மதுரை, செப். 19: மதுரை ஆத்திக்குளம் அருகே உள்ள நாகனாகுளம் மகாலெட்சுமி நகரைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் மகன் சரவணன்(23). இவர் மதுரை நகரில் நடந்த கொலை வழக்கில் போலீசாரின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இவரது சட்ட விரோத செயலை கட்டுப்படுத்தும் வகையில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் நேற்று சரவணனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: