திருச்செங்கோடு, செப்.19: திருச்செங்கோடு வேலூர் சாலையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட துணை செயலாளர் சேகர் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர்கள் செல்வராஜ், சுகந்தி மணியம், மாவட்ட பொருளாளர் குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செழியன், யுவராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் அன்பழகன், செல்வராஜ், அம்பிகா முன்னிலை வகித்தனர். மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.எஸ்.மூர்த்தி எம்எல்ஏ தீர்மானங்களை விளக்கி பேசுகையில், ‘இளைஞர் அணிக்கு தமிழகத்திலேயே அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்,’ என்றார்.