புதுக்கோட்டை,செப்.19: கார் விற்பனை குறைவு எதிரொலியாக வீல் அலாய்மென்ட் நிலையங்களில் வாகனங்கள் இல்லாமல் வெறுச்சோடி காணப்படுகிறது.தமிழகத்தில் வாகனங்களின் விற்பனை குறைவல் நகரங்களில் தொடங்கப்பட்ட கணிப்பொறி வசதியுடன் கூடிய வீல் அலாய்மென்ட் மற்றும் டயர்கள் விற்பனை நிலையத்திற்கு போதிய கார்கள் வராததால் வெறிச்சோடும் நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த 10 ஆண்டுகளுக்கு ஒரு கிராமத்ததில் ஆயிரம் வீடுகளில் 20 வீடுகளில் தான் இரு சக்கர வாகனம் இருக்கும். இதபோல் நகர் பகுதியில் குறைந்து அளவு தான் இருசக்கர வாகனம் இருக்கும். இதேபோல் கிராமத்தில் ஒரு சில வீடுகளில் தான் நான்கு சக்கர வாகனம் இருக்கும். தற்போது இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்ளின் புழக்கம் அதிகிரித்துவிட்டது. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் வாகனங்களின் விற்பனை அதிகரித்து வண்ணம் இருந்தது. இந்த வாகனங்களுக்கு தேவையான டயர்கள் வாங்க வேண்டுமெனில் பெரு நகரங்களுக்கு தான் செல்ல வேண்டும். குறிப்பாக நான்கு சக்கர வாகனங்ளுக்கு டயர் மாற்ற வேண்டுமானால் திருச்சி, மதுரை போன்ற பெரு நகரங்ளுக்குதான் போக வேண்டும். ஏனென்றால் அங்குதான் கம்ப்யூட்டர் உதவியுடன் வீல் அலாய்மென்ட் பார்க்க முடியும். இதபோல் பல்வேறு வகையான கம்பெனிகளின் டயர்களை வாங்க இரு சக்கர வாகனங்கள் வைத்திருப்போர்கள் பெரு நகரங்களை நோக்கி வருவார்கள்.