நாகர்கோவில், செப்.17 : நாகர்கோவில் மற்றும் குழித்துறையில் பி.எஸ்.என்.எல் தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.
நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல் தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் அங்கீகார தேர்தல் நடத்தப்படுகிறது. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மற்றும் குழித்துறையில் இந்த தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. குழித்துறையில் 100 பேரும், நாகர்கோவிலில் 150 பேரும் என்று மொத்தம் 250 பேர் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு தேர்தல் நடந்தது.