பள்ளிபாளையம், செப்.15: திருச்செங்கோடு கூட்டப்பள்ளி ஏரியை தூர்வார, தனது ஒரு மாத சம்பளத்தொகையை எம்எல்ஏ சரஸ்வதி நன்கொடையாக வழங்கினார். பள்ளிபாளையம் ஆவாரங்காடு நகராட்சி திருமண மண்டபத்தில், முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பங்கேற்று, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் பங்கேற்ற திருச்செங்கோடு எம்எல்ஏ பொன்.சரஸ்வதி, கூட்டப்பள்ளி காலனி ஏரியை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள துளிர் நலச்சங்கத்திற்கு, தனது ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக அளித்தார்.