மார்த்தாண்டத்தில் விதிமீறி இயங்கிய 4 ஆம்னி பஸ்கள் பறிமுதல்

மார்த்தாண்டம் : மார்த்தாண்டம்  வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர்  சத்தியகுமார் மற்றும் அதிகாரிகள் புதுக்கடை, நித்திரவிளை, கொல்லங்கோடு  உள்ளிட்ட பகுதிகளில் திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கேரள  பதிவெண் ெகாண்ட 4 ஆம்னி பஸ்கள் சிக்கின. அதிகாரிகள் அந்த ஆம்னி பஸ்களை  சோதனை செய்தபோது உரிய வரி செலுத்தாமல் அவை இயக்கப்படுவது தெரியவந்தது.  

இதையடுத்து அந்த ஆம்னி பஸ்களை பறிமுதல் செய்தனர். இதில் ஒரு ஆம்னி  பஸ்சுக்கு ரூ.45 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுபோல விதிமுறை மீறி  இயங்கிய ஒரு மினி பஸ்சும் பிடிபட்டது. பறிமுதல் செய்த வாகனங்களை அதிகாரிகள்  கோழிப்போர்விளையில் உள்ள வட்டார  போக்குவரத்து அலுவலகம் கொண்டு சென்றனர்.  இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு விதிமுறை மீறி இயங்கும்  வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: