கீழவடகரை ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம்

பெரியகுளம்,செப்.15: பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் கீழவடகரை ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் பெருமாள்புரம் கிராமச்சாவடி வளாகத்தில் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) எம்.எபி தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய உதவியாளர் தங்கம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக உதவி திட்ட அலுவலர் பழனிச்சாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசினார்.

கூட்டத்தில் கீழவடகரை ஊராட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம், தனிநபர் சுகாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் ஊட்டச்சத்து இயக்கம் நடத்த மத்திய அரசால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் செப்டம்பர் 2019 மாதத்தினை தேசிய ஊட்டச்சத்து மாதமாக கொண்டாட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு பொதுமக்களிடம் உறுதிமொழி எடுக்கப்பட்டது. கூட்டத்தில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் ஜெயப்பாண்டியன் நன்றி கூறினார்.

Related Stories: