மாவட்டத்தில் பரவலாக மழை

ஈரோடு, செப். 15:     ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் ஈரோடு மற்றும் மாவட்டத்தின் சுற்றுப்புற பகுதிகளில் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. இதில் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்):  கவுந்தப்பாடி-21.2, கொடுமுடி- 15.2, பவானி-9.4, கொடிவேரி-9.2, கோபிசெட்டிபாளையம்-8, சத்தியமங்கலம்-7, சென்னிமலை-7, ஈரோடு-6, குண்டேரிப்பள்ளம்-3, அம்மாபேட்டை-2.8, வரட்டுப்பள்ளம்-2.6, பெருந்துறை-2, நம்பியூர்-2, பவானிசாகர்-1.2, தாளவாடி-1 மி.மீட்டர் மழை பெய்தது.

Related Stories: