ராணுவ வீரர் வீட்டில் பூட்டை உடைத்தவர் கைது

கம்பம், செப்.11.கம்பத்தில் ராணுவ வீரரின் வீட்டில் பூட்டை உடைத்து திருடியவரை போலீசார் கைது செய்தனர்.கம்பம் மணி நகரத்தை சேர்ந்த ராணுவ வீரரான நாகபிரதீப் மனைவி மாரீஸ்வரி (26). இவர் கடந்த 6ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு சின்னமனூரில் உள்ள தனது பெற்றோரின் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று காலை வீட்டிற்கு வந்தார். அப்போது கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பித்தாளை குத்துவிளக்கு, அண்டா, குடம், பூவாளி, கரண்டி, பீரோவில் வைக்கப்பட்ட உண்டியலில் இருந்த பணம் ரூ.2000 மொத்தம் என மொத்தம் ரூ.27 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. உடனே இதுகுறித்து கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில் மாரீஸ்வரி புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கீதா, சப் இன்ஸ்பெக்டர் முத்து செல்வன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு சென்று தடயங்களை சேகரித்தனர். பின்னர் சந்தேகத்தின் பெயரில் அதே பகுதியை சேர்ந்த ஆனந்த்(25) என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் திருடியதை ஒப்புக்கொண்டார். பொருட்களை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிவு செய்து ஆனந்த்தை கைது செய்தனர்.

Related Stories: