ராஜராஜன் கல்லூரி மாணவர் இந்திய ரோல்பால் அணியில் தேர்வு

காரைக்குடி, செப். 11: இந்திய ரோபால் அணியில் விளையாட காரைக்குடி ராஜராஜன் பொறியியல் கல்லூரி மாணவர் தேர்வு பெற்றுள்ளார். சர்வதேச மற்றும் ஆசிய அளவிலான ரோல்பால் கூட்டமைப்புடன் இணைந்த ரோல்பால் பெடரேசன் ஆப் இந்தியா அமைப்பு இந்திய அணிக்கான ரோல்பால் விளையாட்டிற்கான வீரர்கள் தேர்வு பல்வேறு மண்டலங்களாக பிரித்து நடத்தப்பட்டது. இதில் ஸ்ரீ ராஜராஜன் பொறியியல் கல்லூரி மாணவர் தென்னிந்திய மண்டலம் அளவில் நடத்தப்பட்ட போட்டியில் காரைக்குடி ஸ்ரீராஜராஜன் பொறியியல் கல்லூரி இரண்டாம் ஆண்டு சிவில் பிரிவு மாணவர் வைதீஸ்குமார் வெற்றி பெற்று முதலிடம் பெற்றுள்ளார். நாடு முழுவதிலும் இருந்து 24 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இரண்டுபேர்களில் இக்கல்லூரி மாணவர் ஒருவர். இவர் சூரத்தில் அக்டோபர் 1 முதல் 8ம் தேதி வரை நடக்கவுள்ள பயிற்சி முகாமில் கலந்து கொள்ளவுள்ளார். தேர்வு பெற்ற மாணவரை கல்லூரி முதல்வர் பொன்வாசன், உடற்கல்வி இயக்குநர் சுந்தர் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

Related Stories: