மதுரை, செப்.11: மதுரை சிக்கந்தர் சாவடியில் தினமும் தீ எரிந்து கொண்டே இருக்கிறது. புகையும் ஏழுவதால் மக்கள் மூச்சுத்திணறலில் சிக்கி அவதிப்படுகின்றனர்.மதுரை மாநகராட்சி எல்லையில் சிக்கந்தர்சாவடி அமைந்துள்ளது. இங்கு ரோட்டோரம் ஓட்டல்கள், பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். சாலையோரத்தில் கிடக்கும் குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைக்கின்றனர். தினமும் தீயும் புகையுமாக இப்பகுதி காட்சியளிக்கிறது. வாகனத்தில் செல்பவர்கள், தீ, புகைக்கு பயந்து செல்ல வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது.