கோவை, செப்.11: கோவை மாவட்டத்தில் கொசு உற்பத்தி அதிகரித்து வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. திறந்த வெளியில் நீர் தேக்கம் இருப்பதால் கொசுக்கள் வேகமாக பெருகி வளர்ந்து வருவதாக கூறப்படுகிறது. கொசுக்களை அழிக்க முடியாமல் சுகாதார துறை, உள்ளாட்சிகள் திணறி வருகிறது. இதுவரை வைரஸ் கொசு ஸ்டேஜ் 4 அளவை தாண்டியதால் பாதிப்பு வேகமாகி விட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஏடீஸ் வகை கொசுக்களின் பெருக்கம் அதிகமாகி விட்டது. சுகாதார துறையினர் கூறுகையில், ‘‘கொசுக்களின் வாழ்க்கை 6 நாட்கள் முட்டை பருவத்தில் இருந்து அடுத்த 6 நாட்கள் பியூப்பா என்ற இளம் பருவத்திற்கு மாறுகிறது. பின்னர் வளர்ந்த கொசுவாக மாறி விடுகிறது. கொசுக்களை அழிக்கும் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொசு முட்டைகளை அழிக்க நீர் தேக்கத்தில், தொட்டிகளில் ‘அபேட்’ என்ற மருந்து ஊற்றப்படுகிறது.