தூத்துக்குடி, செப்.11: தூத்துக்குடி மாவட்டகலெக்டர் சந்தீப்நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: அனைத்து கிராமங்களில் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அம்மா திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் 13ம்தேதி (வெள்ளிக்கிழமை) அந்தந்த தாசில்தார்கள் தலைமையில் அம்மா திட்ட முகாம் நடைபெறவுள்ளது. தூத்துக்குடி வட்டத்தில் வர்த்தகரெட்டிபட்டி - ராமநாதபுரம் கிராமத்திலும், வைகுண்டம் வட்டத்தில் பேரூர் கிராமத்திலும், திருச்செந்தூர் வட்டத்தில் மெஞ்ஞானபுரம் கிராமத்திலும் சாத்தான்குளம் வட்டத்தில் பன்னம்பாறை கிராமத்திலும், கோவில்பட்டி வட்டத்தில் முடுக்குமீண்டான்பட்டி கிராமத்திலும், விளாத்திகுளம் வட்டத்தில் வெள்ளையம்மாள்புரம் கிராமத்திலும், எட்டயபுரம் வட்டத்தில் கீழஈரால் கிராமத்திலும், ஓட்டப்பிடாரம் வட்டத்தில் ஆரைக்குளம் கிராமத்திலும், கயத்தாறு வட்டத்தில் கொத்தாளி கிராமத்திலும், ஏரல் வட்டத்தில் நாசரேத் கிராமத்திலும் முகாம் நடைபெறுகிறது.