காரைக்கால், செப்.11: காரைக்கால் திருநள்ளாறு சாலை ஒழுங்கு முறை விற்பனை கூடம் அருகே உள்ள புதுக்குளம், கைலாசநாதர்தேவஸ்தானம் சார்பில், தூர்வாரும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.காரைக்காலில் ஒவ்வொரு அரசுத்துறையும் மற்றும் கோயில்கள், தனியார் தொழிற்சாலைகள் அந்தந்த பகுதிகளில் உள்ள குளம், வடிகால் வாய்க்கால்களை தூர்வாரி மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா நம் நீர் திட்டத்தை அறிமுகம் செய்து பணியை தீவிரப்படுத்தி வருகிறார். அதன்படி, இதுவரை சுமார் 140க்கு மேற்பட்ட குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளது.இதன் ஒரு பகுதியாக, காரைக்கால் திருநள்ளாறு சாலை ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் அருகே உள்ள புதுக்குளம் கைலாசநாதர், நித்யகல்யாணப் பெருமாள் தேவஸ்தானம் சார்பில் தூர்வாரும் பணிதொடங்கியுள்ளது.