முத்துப்பேட்டை, செப்.11:
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த வௌளங்கால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த கருத்துக்களை தெரிவிக்கும் துளிர் இல்லம் துவக்க விழா நடைபெற்றது . இதையொட்டி இதில் அரிய பழங்கால இந்திய “நாணயங்கள் மற்றும் தபால்தலைகள் கண்காட்சியும்” நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் உமாபதி தலைமை வகித்தார். முத்துப்பேட்டை வட்டார வளமைய மேற்பார்வையாளர் முத்தண்ணா, ஆசிரிய பயிற்றுனர் தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முத்துப்பேட்டை வட்டார தலைவர் மகாதேவன் அறிவியல் இயக்க செயல்பாடு குறித்தும் துளிர் இல்லம் குறித்தும் அறிமுக உரையாற்றினார்.இதில் கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியரும் நாணயவியல் ஆராய்சியாளருமான சுரேஷ், தான் சேகரித்து வைத்துள்ள அரிய பழங்கால இந்திய நாணயங்கள் (விளக்க குறிப்புகளுடன்) உலக நாடுகளின் நாணயங்கள் உலக நாடுகளின் தபால்தலைகளை கண்காட்சியாக அமைத்து மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் விளக்கம் அளித்தார். துளிர் இல்லத்தினை வட்டாரக்கல்வி அலுவலர் சொக்கலிங்கம் திறந்து வைத்தார்.நாணய கண்காட்சியினை எடையூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் வெங்கடேசன் திறந்து வைத்தார்.