சமையலர் வீட்டில் 25 பவுன் திருட்டு

சிங்கம்புணரி, செப். 10: சிங்கம்புணரி  அருகே, கண்ணமங்கலபட்டியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி தங்கம் (30). இவர், சிங்கம்புணரி அரசுப் பள்ளியில் சமையலராக உள்ளார். கணவர் வெளிநாட்டில் உள்ளார்.

இந்நிலையில், தங்கம் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு  சென்றார். மதியம் 2.30 மணியளவில் மீண்டும் வீட்டிற்கு வந்தார். அப்போது  வீட்டின் கதவுகள் திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்சியடைந்தார். உள்ளே சென்று  பார்த்தபோது பிரோவில் இருந்த 25 பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து சிங்கம்புணரி  போலீசில் தங்கம் புகார் செய்தார். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து, நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: