கோவை, செப்.10:கோவை காந்திபுரத்தில் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டும் பணியை பொதுப்பணித்துறை முதன்மை செயலர் நேற்று ஆய்வு செய்தார். ஒரு மாதத்திற்குள் இந்த பணியை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு பாலத்தை திறந்துவிட வேண்டும் என அவர் உத்தரவிட்டார். கோவையில் 2 ஆண்டிற்கு முன் காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் 2 கி.மீ தூரத்திற்கு பாலம் கட்டப்பட்டது. தற்போது 100 அடி ரோட்டில் இருந்து ஆவாரம்பாளையம் ரோடு சிக்னல் வரை 2வது அடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இந்த கட்டுமான பணியை தமிழக நெடுஞ்சாலைத்துறை முதன்மை செயலாளர் பிரபாகர் நேற்று ஆய்வு செய்தார். மேம்பாலம் கட்டும் பணி ஆவாரம்பாளையம் ரோடு சிக்னல் முன் தற்போது நடந்து வருகிறது. இந்த பாலம் பணி 2 மாதத்தில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என ஆய்வின் போது முதன்மை செயலாளர் உத்தரவிட்டார். 100 அடி ரோட்டில் பாலம் துவங்கும் இடம் மிக உயரமாக இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து இந்த பாலத்தின் மீது வாகனங்களை இயக்கி வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.