திருவாரூர், செப். 10: தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி மற்றும் மாவட்டத்தலைவர் ரங்கராஜன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, டெல்டா மாவட்டங்களில் கடந்த 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடி பொய்த்துப்போன நிலையில் நடப்பாண்டில் சம்பா சாகுபடியை மேற்கொள்ளலாம் என விவசாயிகள் நம்பிக்கையில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் கடைமடை பகுதியான திருவாரூர் மாவட்டத்திற்கு இதுவரையில் முழுமையான அளவில் தண்ணீர் ஆறுகளை சென்றடையவில்லை. இதன் காரணமாக விவசாயிகள் சாகுபடி பணிகளை துவங்க முடியாமல் இருந்து வருகின்றனர்.