கோவை, செப்.10: கோவை அருகே வடவள்ளியில் இயங்கி வரும் நேர்டு பன்னாட்டு புதுப்பிக்க கூடிய எரிசக்தி வளர்ச்சி நிறுவனத்தில் ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலைவாய்ப்புடன் கூடிய சூரிய மின்திட்ட 3 மாத இலவச தொழிற் பயிற்சியை முடித்தவர்களுக்கு வேலைக்கான நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.இதில் பன்னாட்டு புதுப்பிக்க கூடிய எரிசக்தி வளர்ச்சி நிறுவன இயக்குனர் பேராசிரியர் காமராஜ் கலந்து கொண்டு பணிநியமன ஆணைகளை வழங்கி பேசியதாவது: மத்திய எரிசக்தி அமைச்சகம் 2022ம் ஆண்டிற்குள் 1.75 லட்சம் மெகாவாட் எரிசக்தி, கரிம எரிவாயு மற்றும் சூரிய சக்தி போன்ற புதிய மற்றும் புதுப்பிக்க கூடிய எரிசக்தி வளங்களில் இருந்து உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.
மேலும், 2022ல் பேட்டரி கார்களுக்கு டீசல் மற்றும் பெட்ரோல் எரிபொருட்களை பயன்படுத்தாமல் சூரிய சக்தியால் சார்ஜ் செய்யும் முறை அமலுக்கு வர உள்ளது.